விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வருணுக்கு கிடைத்த வரவேற்பு – வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியற்றப்பட்ட போட்டியாளர் வருணுக்கு அவரது குடும்பத்தார் அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வருண்
விஜய் டிவியில் சுமார் 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ சீசன் 5. இதுவரை சுமார் 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5வது சீசனும் தற்போது முடிவை எட்டி இருக்கிறது. வழக்கம் போல சில பரீட்சயப்பட்ட மற்றும் அறியப்படாத முகங்களுடன் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 8 பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த வாரம் அதாவது நேற்று நடைபெற்ற எலிமினேஷனில் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது ‘பிக் பாஸ்’ சீசன் 5 துவங்கிய நாள் முதற்கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டு வந்த அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த டபுள் எவிக்ஷன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளிக்கக்கூடியதாக இருந்தாலும் இந்நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பதால், இருவர் வெளியேற்றப்பட்டனர்.
இதில் எந்தவொரு சண்டை, பிரச்சனைகளிலும் கலந்து கொள்ளாமல் தன்னுடைய போட்டிகளை சிறப்பாக விளையாடிய வருண் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வருணுக்கு அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து உற்சாகமான வரவேற்பை கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.