தமிழகத்தில் 800+ கிராம நிர்வாக அலுவலர் (VAO) காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப கோரிக்கை!

0
தமிழகத்தில் 800+ கிராம நிர்வாக அலுவலர் (VAO) காலிப்பணியிடங்கள் - விரைவில் நிரப்ப கோரிக்கை!
தமிழகத்தில் 800+ கிராம நிர்வாக அலுவலர் (VAO) காலிப்பணியிடங்கள் - விரைவில் நிரப்ப கோரிக்கை!
தமிழகத்தில் 800+ கிராம நிர்வாக அலுவலர் (VAO) காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப கோரிக்கை!

தமிழகத்தில் நேற்று நடந்த, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு விழாவில், மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை இந்த அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

முக்கிய கோரிக்கை:

இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாக, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சமீப காலமாக இந்த போராட்டம் மிகவும் வலுப்பெற்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

தங்க நகைப்பிரியர்கள் கவனத்திற்கு – நகரங்கள் வாரியாக இன்றைய விலை நிலவரம்!

இந்நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு விழா ஆகியவை நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். மேலும் நகர நில அளவை பட்டா மாறுதல் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியது, தமிழகத்தில் காலியாக உள்ள 800 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை இந்த அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அரசினுடைய அனைத்து நலத்திட்ட உதவிகளும், திட்டங்களும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாகத்தான் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் உடைய கோரிக்கைகளை இந்த அரசு கனிவுடன் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் மேலும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் நாகேஸ்வர காந்த் வரவேற்றார். மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் பி.எஸ். மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!