இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரயில் சோதனை ஓட்டம்!
இந்தியாவின் முக்கியமான 75 நகரங்களை வந்தே பாரத் ரயிலுடன் இணைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.தற்போது இதன் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சோதனை ஓட்டம்:
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் அரசுப் பேருந்து கட்டணங்களை விடவும் ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் நெடுந்தொலைவு செல்ல விரும்பும் நடுத்தர, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயில்களையே நாடுகின்றனர். இதில் கட்டணமும், நேரமும் குறைவு என்பதால் ரயில் பயணம் மக்களுக்கு சௌகரியமாக உள்ளது. மேலும் ரயில்வே துறையானது பயணிகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை!
அந்த வகையில் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் கஜுராஹோவிலிருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து மத்திய அரசு 75 முக்கிய நகரங்களை இணைக்கும் திட்டத்தை உருவாக்கியது. இதற்கான பணியை சென்னை ICF தொழிற்சாலையில் துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து சண்டிகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 180 கி மீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. நமது நாட்டில் இந்த ரயில்கள் முழுவதுமாக இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த ரயில் பயணிகள் மிகவும் சிக்கனமானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கஜுராஹோ ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு குறித்து பேசிய ரயில்வேத்துறை அமைச்சர் கஜுராஹோ ரயில் நிலையம் உலகத்தரத்தில் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்