‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வனிதா விஜயகுமார்? ரசிகர்கள் ஷாக்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் டேஞ்சர் சோனில் இருக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றி பெற்ற ஒரு ரியலிட்டி நிகழ்ச்சி ஆகும். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான போட்டியாளர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார்கள். பிக்பாஸ் போட்டியாளர்கள் மறு வாய்ப்பு கொடுக்கப்பட்டத்தை சாதகமாக பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இயக்குனருக்கு வந்த சோதனை – விலகிய அஞ்சலி! அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!
நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் மூன்றாம் சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் பல சண்டைகளுக்கு மூலக் காரணமாக இருக்கிறார். மேலும் பல டாஸ்குகள் சண்டை மூட்டுவது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை வெளியான ப்ரோமோக்கள் சுவாரசியம் அதிகமாக இருந்தது. மேலும் முதல் வாரத்திலேயே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கப்பட்டுள்ளது.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதாவை அழ வைத்த அபிராமி – இதற்கு தானா? கலாய்க்கும் ரசிகர்கள்!
அதில் வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய் என 3 பேரும் டேஞ்சர் சோனில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இவர்கள் தான் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுப்பவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் எலிமினேட் ஆக கூடாது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்காது என்பது போல தகவல்கள் வைரலாகி வருகிறது.