‘பிக்பாஸ் ஜோடிகள்’ நகுலுக்கு தக்க பதிலடி கொடுத்த வனிதா – ட்விட்டரில் ஆவேச பதிவு!
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா, சில காரணங்களால் அந்த போட்டியில் இருந்து விலகினார். அந்த சம்பவம் குறித்து நடிகர் நகுல் கூறியுள்ள கருத்துக்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
வனிதா விமர்சனம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவரது அடாவடியான பேச்சுக்கு அவர் மீது அடிக்கடி சர்ச்சைகளும், குற்றம் சாட்டுதலும் எழுந்து வருவது உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் 3 ஆவது திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு வந்தார்.
அனுவை மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ஒத்துக் கொள்ளும் ரோஜா – வெளியான ப்ரோமோ!
அந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் பங்குபெற்று வந்தனர். இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட நடன போட்டியில் நடுவர்கள் மிகக் குறைவான மதிப்பெண் வழங்கியதாகவும், மற்ற போட்டியாளர்களுடன் கம்பேர் செய்து பேசியதாகவும் கூறி அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த காரசாரமான சண்டை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நடிகை வனிதா நடன போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலின் போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் நடிகர் நகுல், வனிதா வெளியேறிய சம்பவம் குறித்து பேசியுள்ளார். அப்போது அம்மன் வேடமிட்டு தகாதவிதமாய் வனிதா பேசியுள்ளதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளிகள் வனிதா காதுகளுக்கு எட்டிவிட, நகுலுக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், ‘நான் இப்போது பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். இதை விட்டுவிட்டு வீணான உளறல்களை கவனிக்க நேரமில்லை. நிகழ்ச்சியில் நடந்ததும், அதை எடிட் செய்து வெளியானதற்கும் வித்தியாசம் உண்டு. நடன போட்டியில் எனக்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண்களை நான் ஏற்றுக்கொள்ளாததால், அதில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். எனக்கு ஒருவரிடம் பிரச்சனை இருக்கிறது என்றால் அது எங்களுக்குள் இருக்கட்டும். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கையில் வேறு ஒருவர் அதைப்பற்றி பேச தேவையில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.