தமிழகத்தில் மே 5ம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை – வணிகர் விடியல் மாநாடு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மாநாடுகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சியில் வருகிற மே 5ம் தேதி அன்று தமிழக வணிகர் விடியல் மாநாடு நடைபெற உள்ளது. அதனால் திருச்சியில் உள்ள அனைத்து வகையான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் பல்வேறு வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டம் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற மே 5ம் தேதி அன்று வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக திருச்சியில் வருகிற மே 5ம் தேதி அன்று வணிகா் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக மாநாடு நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு – அடுத்ததடுத்து வரும் நான்கு சலுகைகள்!
அத்துடன் இந்த வணிகா் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் சிறப்பு உரையாற்ற உள்ளார். மேலும் இது குறித்து பேரவை அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது, தமிழகத்தில் திருச்சியில் 39ம் வது வணிகர் தினத்தையொட்டி முன்னிட்டு மே 5ம் தேதி அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பாக மாநாடு நடைபெற உள்ளது. அதனால் இந்த மாநாட்டில் அனைத்து வணிக கடைகளை சார்ந்த வணிகர்களும் பங்கேற்க வேண்டும் அத்துடன் இம்மாநாட்டில் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதனால் இந்த மாநாட்டில் வணிகர்கள் கலந்து கொள்ள ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான கடைகளும் பங்கு பெறும் வகையில் வருகிற மே 5ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை அனைத்து கடைகள், பெருநிறுவனங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், மருந்தகங்கள், மால்கள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதனால் பொதுமக்கள் தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்