சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின்னர் திறப்பு – பொதுமக்களுக்கு அனுமதி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்கா:
தமிழகத்தில் தடுப்பூசிகள் விளைவாலும், அரசின் முயற்சியாலும், அதற்கு மக்கள் அளித்த போதிய ஒத்துழைப்பினாலும் கொரோனா இரண்டாம் அலை எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 21ம் தேதி அளிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளில் திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா – 37,593 பேருக்கு தொற்று, 648 பேர் பலி!
அதனை தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பூங்காக்களை தொடர்ந்து சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்ககளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பூங்கா முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வன விலங்குகளை பாதுகாக்க மாநில அளவில் தமிழக அரசு 7 பேர் அடங்கிய பணிக்குழுவை அமைத்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது மீண்டும் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் நபர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பூங்காவிற்கு வருகை தரும் நபர்களின் பெயர், செல்போன் எண்ணை சேகரித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெருந்தொற்று காலம் என்பதால் வாகன சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் வண்டலூர் பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.