சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர்!
சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”வானத்தைப் போல ”சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானத்தை போல நடிகை விலகல்:
சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் பட வாய்ப்பு கிடைத்து நிறைய நடிகைகள் சீரியலை விட்டு சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒளிபரப்பப்பட்டு ”வானத்தைப் போல ” சீரியல் ஆரம்பத்தில் சற்று சறுக்கிய நிலையில் சென்றது. அண்ணன், தங்கையின் பாசப்போராட்டத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த வானத்தைப் போல தொடரில் கதாநாயகனாக அண்ணன் கதாபாத்திரத்தில் தமன் குமாரும், தங்கச்சி கதாபாத்திரத்தில் சுவேதா என்பவரும் நடித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் இந்த வானத்தைப் போல சீரியலுக்கு பிறகு சுவேதாவிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடந்து சிறப்பாக மக்களிடையே வரவேற்பை பெற்ற இந்த தொடரை விட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுவேதா விலக உள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை துளசி சீரியலை விட்டு விலகுவது உண்மை தான் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த செய்தி இவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே இவருடைய கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்க இருப்பது யார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில் ராஜபாண்டியனுடன் புதிய துளசி இருக்கும் புகைப்படத்தை வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.