சன் டிவி “வானத்தை போல” சீரியலில் இருந்து விலகிய தமன் குமார் – ஸ்வேதாவை தொடர்ந்து அதிரடி முடிவு!
சன் டிவி “வானத்தை போல” சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் தங்கையாக நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்த தமன் சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
வானத்தை போலே சீரியல்:
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பின் சின்னத்திரைக்கு சென்றவர் நடிகர் தமன் குமார். அவர் தற்போது சன் டிவியில் வானத்தை போல என்ற அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்ட சீரியலில் நடித்து வருகிறார். அண்ணனாக அவர் நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார். இருவரின் பாசத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
நடிகை சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு இது தான் காரணம்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்!
அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தற்போது களமிறங்கி இருக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் அமைந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த தமன் குமார் விலக இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆமாம் சீரியலில் இருந்து விலக இருப்பது உண்மை தான் இனிமேல் சீரியல் வேண்டாம் என வருத்தமாக பதில் அளித்திருக்கிறார். அவர் பல முன்னணி படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் சீரியலில் முதன்முறையாக வந்திருக்கிறார்.
இவர் தற்போது கண்மணி பாப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீமணி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தமன், மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம் புலி, போன்றவர்கள் நடித்துள்ளனர். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகினாலும் வெள்ளித்திரையில் அவரை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.