பொய்களின் உறைவிடமாய் களம் இறங்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ – இன்று முதல் விஜய் டிவியில் புதிய சீரியல்!
விஜய் டிவியின் மெகா தொடர்கள் வரிசையில் தற்போது இன்று முதல் ஒரு புதிய தொடர் இணைய இருக்கிறது. புதிய தொடரின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
வைதேகி காத்திருந்தாள்:
மக்களின் மனம் கவர்ந்த மெகா தொடர்கள் எத்தனை இருந்தாலும் புதிதாக ஒரு தொடர் ஒளிபரப்பாக ஆரம்பித்தால், அதற்கும் ரசிகர்கள் சேர்ந்து விடுவார்கள். அதிலும் விஜய் டிவியின் சீரியல்கள் என்றால் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் தொடர்களின் கதையம்சம் அமைக்கப்பட்டிருப்பதுடன் விருப்பமான நடிகர், நடிகைகளின் பட்டாளம் சீரியலில் இருக்கும் போது அந்த தொடர் நிச்சயமாக வெற்றி அடைகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் இன்று முதல் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா குழந்தையின் கியூட் புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!
அதில் நாயகனாக பிரஜன், நாயகியாக சரண்யா மற்றும் பழம்பெரும் நடிகை லதா என்று ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே உள்ளது. பணக்கார குடும்பத்தில், சிறு வயதில் தொலைந்து போன பேத்தியை தேடுகிறார்கள். அப்போது அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பொய்யான ஒரு பெண்ணை குடும்பத்தின் பேத்தி என்று அழைத்து வருகிறார். வந்த இடத்தில் ஒரு போட்டோவை காட்டி அவர் தான் அம்மா என்று கூறுகின்றனர். அப்போது அந்த பெண்ணிற்க்கு அந்த முகம் தனக்கு பரிச்சயமாக இருக்கிறது மற்றும் தான் சிறு வயதில் தொலைந்து போன நியாபகம் வருகிறது. இப்படி தான் சீரியலின் அறிமுக ப்ரோமோ ஒளிபரப்பானது.
நெருப்பை பார்த்து பயந்த வருண், முரட்டுத்தனமாக தாக்கப்பட்ட சத்யா – “மௌன ராகம் 2” ப்ரோமோ!
டிசம்பர் 20ம் தேதியான இன்று முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இன்றைய ப்ரோமோவில், நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லும் பெண்ணாக கதாநாயகி அறிமுகம் ஆகிறார். பூர்ணிமா என்ற வைதேகி என்று அனைவரும் கூப்பிட, இவர் வந்தாலே கேஸ் வெற்றி தான் என்று அனைவரும் புகழ்கிறார்கள். இப்படி ஆரம்பிக்கும் இந்த தொடர் எவ்வாறு இருக்கிறது என்பதை வரும் நாட்களில் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் நல்ல கதை திருப்பங்களுடன் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.