ப்ரஜின், சரண்யா நடிப்பில் விஜய் டிவி ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த வகையில் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி முதல் நடிகர் ப்ரஜின் நடிக்கும் புதிய சீரியல் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
புதிய சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. அதன் காரணமாக முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மேலும் புதிய மாறுபட்ட கதையுடன் கூடிய சீரியல்களை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல திருப்பங்களையும் அறிமுகம் செய்து மக்களை தொடர்ந்து சீரியல் பார்க்க தூண்டுகிறது. அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி இடம் உண்டு.
கைக்குழந்தையுடன் ‘பாரதி கண்ணம்மா’ சூட்டிங்கிற்கு வந்த வெண்பா – ரசிகர்கள் ஷாக்!
அதற்கு காரணம் விஜய் டிவி சீரியல்களில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். மேலும் TRPயில் விஜய் டிவி சீரியல்கள் முதல் ஐந்து இடங்களில் கட்டாயம் இருக்கும். தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலமாக பிரபலமான ப்ரஜின் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை சரண்யா துராடி இணைந்து “வைதேகி காத்திருந்தாள்” என்ற புதிய சீரியல் அறிமுகம் செய்ய இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சீரியல் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமண சீரியல் ஜோடி சித்து & ஷ்ரேயாவுக்கு நேர்ந்த சோகம் – வருத்தத்தில் ரசிகர்கள்!
இது குறித்து வெளியான ப்ரோமோவில், ராணி வைதேகி வருகிறாள் என பாட்டி சொல்ல, நீங்க கவலைப்படாதீங்க நான் நீதிபதியை கூட ஏமாற்றியவள் என சொல்லிக் கொண்டே வைதேகியாக நடிக்க வருகிறாள். அம்மாவின் புகைப்படத்தை பாட்டி காட்ட, அதை பார்த்து வைதேகிக்கு பழைய நியாபகங்கள் வருகிறது. அது அவளுடைய குடும்பம் என உணர்கிறார். ஒரு ராணியே ராணியாக நடிக்க இருப்பதே கதையாக இருக்கிறது. இந்த சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.