ஜூன் 4 முதல் வைகை அணையில் தண்ணீர் திறப்பு – தமிழக அரசு உத்தரவு!!
வைகை அணையிலிருந்து 45041 ஏக்கர் முதல் போக பாசனத்திற்காக ஜூன் 4ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வைகை அணை:
மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்கான தண்ணீர் தேவையை வைகை ஆணை தான் தீர்த்து வைக்கிறது. தற்போது தமிழகத்தில் கோடை காலமாக இருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களில் பெய்த மழையினால் போதிய அளவு தண்ணீர் வைகை அணையில் இருக்கிறது. தற்போது பாசன பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு வைகை அணையிலிருந்து நீரை திறந்து விட ஆணை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – ஜூன் 9 வரை முழு ஊரடங்கு!
அந்த அரசாணையில், பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்கான 1797 ஏக்கர் நிலம், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 16452 ஏக்கர் மற்றும், மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள 26792 ஏக்கர் நிலம் என்று மொத்தம் உள்ள 45,041 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, வரும் ஜூன் 4ம் தேதி முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு ஜூன் 1ம் தேதியான இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையினை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.