தடுப்பூசிகள் டெல்டா வகை கொரோனா தொற்றை தடுக்காது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. மூன்றாம் அலை பரவலை தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவும் என்று பிரிட்டன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்டா வகை கொரோனா:
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு போடப்பட்ட தடுப்பூசிகள் டெல்டா கொரோனா தொற்று பரவுவதை தடுக்காது என பிரிட்டன் அரசு கூறியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகை கொரானா வைரஸ்களால் எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவ முடியும் என பிரிட்டனின் சுகாதார ஒழுங்குமுறை பொது சுகாதார விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆடி அமாவாசை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை!!
பிரிட்டனில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டு கொண்ட 34 .9% மக்கள் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த டெல்டா வேரியண்ட் தற்போது 135 நாடுகளில் பரவி வருகிறது. மிக மோசமான வைரஸ் ஆக கருதப்படும் டெல்டா வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இவ்வாறு அதிதீவிரமாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் சாதாரணமாக பரவி வரும் நோய் தொற்றினால் இறப்பு விகிதம் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் தடுப்பூசி போட்ட பிறகும் ஏற்பட்ட தரவுகளின் அடிப்படையில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 6 கோடி மக்களில் 180 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் பரவும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.