நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி – அரசுக்கு வலியுறுத்தல்!!
தமிழகத்தில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மருத்துவ நுழைவு தேர்வான நீட் நடத்தப்பட்டால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன்பு கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நடத்தப்பட்டு வருவது தான் நீட். இந்த தேர்வை தமிழகத்தில் நடத்த தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகிறது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநில 12 ஆம் வகுப்புகள் பொதுத்தேர்வும் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யபட்டதை தொடர்ந்து நீட் தேர்வும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!!
ஆனால் தற்போது வரை அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. இதனால் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் இதுகுறித்து தனது முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் எந்த சூழலிலும் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய கூடாது.
TN Job “FB Group” Join Now
மேலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக நீட் தேர்வு நடத்தப்பட்டால் தேர்விற்கு முன்பாக தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் தேர்வு எழுதப்போகும் மாணவர்களை கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.