இந்தியாவில் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி? மருத்துவ கட்டுபாட்டு ஆணையம் அனுமதி!
நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
கொரோனா தடுப்பூசி:
பல வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே இருந்தது. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால், அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எனவே, பல மாநிலங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி குறித்து எந்த அறிவிப்பும் முன்னதாக வெளியாகவில்லை.
Exams Daily Mobile App Download
மேலும், இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. ஆனால் 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது 7 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால சிகிச்சைக்காக செலுத்தலாம் என நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்தனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு – அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை 7 – 11 வயதினருக்கு செலுத்த அனுமதி அளிக்குமாறு, அந்நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது அதற்கு இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பரீசீலணை செய்த நிலையில் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்க இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.