இந்தியாவில் 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி – ஐசிஎம்ஆர் தகவல்!
இந்தியாவில் 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் கொரோனா தடுப்பூசி முதல் செலுத்த வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் விளைவாக இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.
தமிழகத்தில் கியூசெட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்.17,18 தேதிகளில் தேர்வு!
இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை பாரத் பயோ டெக் நிறுவனம் பெற்றது. பாரத் பயோடெக்கின் குழந்தைகள் தடுப்பூசி சோதனை முடிவு பெற்று இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உரிமத்தை பெறக்கூடும் என பயோ டெக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கோவாக்சின் தடுப்பூசி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 2 வயது முதல் உள்ளோருக்கு தடுப்பூசி தயாராகி வருவதாகவும் பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் முதல் செலுத்த வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கான இரு நிறுவன தடுப்பூசிகளின் ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய வைராலஜி நிறுவன அதிகாரி பிரியா அப்ரகாம் தெரிவித்துள்ளார்.