தமிழகம் முழுவதும் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசிகள் செலுத்தும் பணி 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதையடுத்து மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் அனைவருக்கும் அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்பட்டது.
கனமழை காரணமாக முழு ஊரடங்கு தொடரும் – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது தமிழகத்திற்கு 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. மேலும் 1.26 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் தமிழகம் வந்தது. அதனால் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. அருப்புக்கோட்டையில் இன்று மாதர் முன்னேற்ற சங்க திருமண மண்டபம் மற்றும் அம்பிகை வித்யா பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் நகராட்சி சுகாதாத்துறை சார்பில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் குமரி மாவட்டத்திற்கு 9600 கோவாக்சின் தடுப்பூசியும் 1500 கோவிஷீல்டு தடுப்பூசியும் வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை 33 தடுப்பூசி மையங்கள் வழியாக நாகர்கோவில் மாநகராட்சி, கன்னியாகுமரி, தோவாளை, இராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், திருவட்டார் போன்ற பகுதிகளில் 18 வயது முதல் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 2ம் டோஸ் தடுப்பூசிகளையும் ஆர்வமாக செலுத்தி கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு 15,000 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் நகரில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.