தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறுத்தம் – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தடுப்பூசி பணிகள்:
தமிழகத்தில் கடந்த மே மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கடும் உச்சம் அடைந்தது. இதனால் கடந்த மே 10ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் முதல் தடுப்புசி வழங்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. நேற்று தொடர்ந்து இன்றும் சென்னையில் உள்ள பல மையங்களில் தடுப்பூசி இல்லை என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசிகள் வராத காரணத்தினால் தற்போது தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரை சுமார் 1 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசிடம் போதுமான தடுப்பூசிகள் கையில் இருப்பு இல்லாத காரணத்தினால் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று சில இடங்களில் மட்டும் குறைவான அளவு தடுப்பூசிகள் வழங்குவதாக கூறப்படுகிறது.