தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை – குவைத் அரசு அறிவிப்பு!
குவைத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறும் அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
வெளிநாடுகளுக்கு செல்ல தடை:
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை பணிகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடுகள் அனைத்தும் ஊரடங்குகளை அறிவித்துள்ளது. மேலும் பல நாடுகள் சர்வதேச பயணிகள் விமானத்தையும் ரத்து செய்துள்ளது. தடுப்பு பணியின் மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்தி தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
செப். 20 ஆம் தேதி JNU நுழைவுத்தேர்வு – முன்பதிவு துவக்கம்!
அதனால் அனைத்து நாட்டு அரசுகளும் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறது. அதற்காக சில நாடுகள் பரிசுகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் முன்பை விட தற்போது தடுப்பூசிகள் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என பல்வேறு நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து குவைத் அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உடனடியாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தடை விதிக்கப்படட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வெளிநாட்டு பயண தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் குவைத்தில் இதுவரை மொத்த மக்கள் தொகையில் 21.95 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.