தமிழகத்தில் தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. தடுப்பூசி கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் எதிர்கொள்வதாக முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் முக்கிய அம்சமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனை முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதற்கு பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும், தொற்று பரவல் அதிகமாக இருந்த போது தமிழகம், ஒடிசா, டெல்லி, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கப்பட்டது குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டன.
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – அட்சய திருதியில் மக்களுக்கு நல்ல செய்தி!
மேற்கொண்டு, கொரோனா குறைந்த நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 96 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்க வேண்டாம் என பல வழக்கறிஞர் தரப்பு வாதங்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.