தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போதுள்ள தடுப்பூசி இருப்பு மற்றும் தேவை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா 2 ஆம் அலைக்கான போரில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் துவங்கி இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பொது முடக்க காலத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பட்டியலின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13,500 வரை ஊக்கத்தொகை – கடைசி நாள்!
இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிமித்தமாக மாநிலம் முழுவதும் கொரோனா தினசரி புதிய பாதிப்புகள் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. முன்னதாக தடுப்பூசிகள் குறித்த அச்சம் காரணமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள பலர் தயக்கம் காட்டினார்கள். ஆனால் போதுமான விழிப்புணர்வு கொடுக்கப்பட்ட பிறகு, மக்கள் மத்தியில் தடுப்பூசிகள் மீதான அச்சம் குறைந்து பலர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள முன்வருகின்றனர்.
ஜூலை 15 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – யூனியன் அரசு!
அதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பெரியமேட்டில் அமைந்துள்ள மத்திய தடுப்பூசி கிடங்கை ஆய்வு செய்த பின்னர் தடுப்பூசி இருப்பு மற்றும் இறக்குமதி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘தமிழகத்தை பொறுத்தளவு இதுவரை 1,46,39,940 தடுப்பூசி டோஸ்கள் கிடைத்துள்ளது.
இவற்றில் 1,45,50,494 தடுப்பூசிகள் நேற்று (ஜூன் 29) இரவு வரை செலுத்தப்பட்டுள்ளது. மீதி 88 ஆயிரம் தடுப்பூசிகளுடன், தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டரை லட்சம் தடுப்பூசிகள் இன்றும், நாளையும் பொது மக்களுக்கு செலுத்தப்படவுள்ளன. கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் தான் ஒரே தீர்வாகும். அதனால் மறக்காமல் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தடுப்பூசி போடுவதில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு சாதனை செய்துள்ளோம்.
தமிழகத்தில் ஹோட்டல்களை விற்கும் உரிமையாளர்கள் – கொரோனா எதிரொலி !!
வரும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 2 ஆம் தேதி துவங்கி சுமார் 71 லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாவட்டங்கள் தோறும் பிரித்து அனுப்பி வைக்கப்படும். இதனால் தடுப்பூசி போடுபவரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்’ என கூறியுள்ளார். இந்த தகவலின் படி தமிழகத்தில் இனி மேலும் ஊரடங்கு நீடிக்கப்படாது என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.