இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜைடஸ் காடிலாவின் ZyCoV-D 12 கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி :
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமெடுத்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் செய்வதறியாமல் திணறுகின்றனர். மாநிலங்கள் முழுவதும் முழு ஊரடங்குகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சியால் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொற்றும் குறைந்து வருகிறது.
SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் மாதம் தேர்வு!
முதலில் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த மே மாதம் முதல் நாட்டில் 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிட்ஷீல்டு, ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து 12 வயது முதல் 18 வயதுடைய கொரோனா குழந்தைகளுக்கு தடுப்பூசி ஆய்வு நடத்தப்பட்டது. முதலில் பாரத் பயோடேக் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசியை பரிசோதிக்கும் அனுமதியை பெற்றது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜைடஸ் காடிலாவின் ZyCoV-D 12 கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குழந்தைகளுக்கு அனுமதி பெறும் முதல் தடுப்பூசியாகும்.ஆகஸ்ட் மாதத்தில் மாதந்தோறும் ஒரு கோடி டோஸ் உற்பத்தி செய்யபடும் எனவும் இந்த உற்பத்தி வரும் இம் மாதத்தின் இறுதியில் தொடங்கும் எனவும் காடிலா ஹெல்த்கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 5 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.