இந்தியாவில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி – ஓரிரு நாட்களில் அனுமதி!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட் தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது, மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜூலை 16 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!!
இந்நிலையில் செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கப்படாதது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
சைகோவ்-டி (ZyCoV-D) என்னும் இந்த தடுப்பூசியை சிறுவர்கள் மற்றும் வயது வந்தோருக்கும் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கான அறிக்கைகளை ஆராய்வதற்காக நிபுணர் குழு இந்த வாரம் கூட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியான சைகோவ்-டி, மூன்று தவணைகளாக செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.