தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தபட உள்ளது. மேலும் பாடத்திட்டங்கள் 50% முதல் 60% வரை குறைக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செப்டம்பர் 1ம் தேதி முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதையடுத்து 100 சதவீத ஆசிரியர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
இன்று முதல் 3 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
பாட புத்தகங்கள் வழங்குதல், பதிவேடுகளை பராமரித்தல், மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அனைத்து பள்ளிகளிலும் பாரத சாரண இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடாக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைந்து முடிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும், மாணவர்களிடம் கற்றல் ரீதியான சுமையை குறைக்கும் நோக்கில் பாடத்திட்டங்கள் 50% முதல் 60% வரை குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் கட்டாயம் இடம்பெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.