சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!

0
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்த வந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயமில்லை

தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அத்துடன் ஓமைக்ரான் தொற்று பரவல் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? வரப்போகும் புதிய ஆபத்து!

இதில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய தேவைகளான மருத்துவ பணி, ATM மையங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு கால அட்டவணை!

அத்துடன் மின்சார ரயிலில் பயணிக்க கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும் மேலும் அதற்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்த வருவதால் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகமும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ரயிலில் பயணிக்க கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் பயணிகள் வழக்கம் போல் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவித்துள்ளது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!