பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் – தடுப்பூசி கண்டுபிடிப்பு!
இந்தியாவில் தற்போது அதிகளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்று நோய் அதிகரித்து வருகிறது. மேலும் இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தற்போது இது குறித்து முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கான தடுப்பூசி
இந்தியாவில் வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே பொதுவாக காணப்படும் புற்றுநோயில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. மேலும் இந்த வகை புற்று நோயால் ஏற்படும் இறப்புகளில் 85 சதவீதம் திகமானவை வளரும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் எப்போது? முழு விபரம் இதோ!
இந்த வகை புற்றுநோய் பொதுவாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களை அதிகம் பாதிப்பதாக கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இது குறித்து வெளியிடப்பட்ட அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புது புது நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இத்தகைய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உலகளவில் புற்றுநோய்க்கு மருத்துவம் அதிகம் கண்டுபிடிக்கபட்டாலும், இவ்வகையான நோய் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுவது பெருமைக்குரியது என்று டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்திருக்கிறார். ஒன்றிய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்