இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏப்ரல் 28 முதல் தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், 6-12 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி அறிவிப்பு:
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கடந்த ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டது. இதன் தாக்கம் ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கி, அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பின. கொரோனா பரவல் ஓய்ந்து விட்டது என பொதுமக்கள் நிம்மதி அடைந்த இந்த நிலையில் கொரோனா 4வது அலை தலைதூக்கி உள்ளது. இந்த வகையில் டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
மோசடிகளை தடுக்கும் புது வித ஆதார் அட்டை அறிமுகம் – பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இதோ!
தற்போது மெல்ல தென் மாநிலங்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அண்மையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தச் சூழ்நிலையில் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான நடைமுறைகள் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக நடைபெற்றது. மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தற்போது நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கொரோனா வைரஸ் மக்களை பாதித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசி தான் வேறு எதுவும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்காது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சிறார்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.