சென்னை முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் – மாநகராட்சி முடிவு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில் மேலும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு தற்போது வரை அமலில் உள்ளது.
தமிழக பாலிடெக்னிக் அரியர் மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு – உயர் கல்வித்துறை அறிவிப்பு!
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது திறக்கப்பட்டு 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் குறைந்தபட்சம் 25,14,000 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.