சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்!
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவியது. நிலைமையை சரி செய்ய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை JEE Mains நுழைவுத்தேர்வு – ஜூலை 6 முதல் விண்ணப்பம்!
அதன் பின்னர் மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தடுப்பூசி முகாம்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. பல தடுப்பூசி முகாம்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நடத்தப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இன்று சென்னையில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் பொதுமக்கள் தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்த ஆன்லைன் பதிவு தேவையில்லை எனவும், ஆதார் கார்டு மூலமாக நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.