ஜூலை 6ல் பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி முகாம் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழகத்தில் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு மருத்துவத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் தடுப்பூசி முகாம் நாளை கலைவாணர் அரங்கில் நடப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகின்றது. முதலில் தடுப்பூசி உற்பத்தி குறைவாக இருந்த காரணத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 வரை IFSC குறியீடு செல்லும்!
அதன்பின்னர், மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதால் கொரோனா தடுப்பூசிக்கு பரவலாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உற்பத்தி பணிகளை தீவிரப்படுத்தி கொரோனா தடுப்பூசிகள் அனைவர்க்கும் கிடைக்கும் படி, முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்ட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.