தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாம் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாம் - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாம் - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாம் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஓமைக்ரான் காரணமாக கொரோனா தடுப்பூசி பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அத்துடன் 16வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முழு விபரங்கள்!

இந்நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கிண்டியில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 18 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதன்மை மாநிலமாக இடம்பெற்று உள்ளது. அத்துடன் ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்புகளை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!

அத்துடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் போன்றவற்றை அதிகரித்து வருகிறது. தற்போது வரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1520 ஆக்சிஜன் படுக்கைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 50 படுக்கை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு 136 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட ஓமைக்ரான் சிகிச்சை வார்டு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாமை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!