தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – அரசு அறிவிப்பு!
பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
உலகம் முழுவதும் அதிகரித்தும் வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. அதன் பேரில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணியை வேகப்படுத்தினர். கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே தொற்றிலிருந்து நம்மை காக்கும் ஒரு பேராயுதமாக உள்ளது.
திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி? மாநில அரசின் முடிவு!
எனவே உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. சில மக்கள் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் தடுப்பூசிகள் செலுத்த முன் வரவில்லை. இவர்களை தடுப்பூசி செலுத்த முன்வர வைக்கும் நோக்கில் அரசுகள் பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு? அரசு திட்டம்!
அதன்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வணிக நிறுவனங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்களிலும் செல்ல அனுமதி கிடையாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.