ஆகஸ்ட் 15 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ரயிலில் பயணிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு!
மஹாராஷ்டிராவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ரயில் பயணம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் அனைத்து பேருந்து போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளும் முடங்கியது. ஊரடங்கால் பயணிகள் வருகை இல்லாததால் பெரும்பாலும் முக்கிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறைய ஆரம்பித்த பிறகு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பாதிப்புகள் அதிகம் இருந்ததால் அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்படவில்லை.
இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால் பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் மக்கள் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் ரயிலில் பயணிப்பதற்கு பயணிகள் பாஸ் எடுக்க வேண்டும். ஸ்மார்ட் போன் இல்லாத பயணிகள் நகராட்சி வார்டு அலல்து புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து பாஸ் பெற்று கொண்டு பயணிக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.