பேருந்துகளில் பயணம் செய்ய ‘இந்த’ சான்றிதழ்கள் கட்டாயம் – இலங்கை அமைச்சர் விளக்கம்!
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைய தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. மேலும் தனியார் பேருந்துகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஜூன் 14 வரை கடுமையான இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் கொரோனா நான்காம் அலை பரவல் இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனவே அச்சப்பட தேவை இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு விளக்கம்!
மேலும் சில கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை நேரம் மட்டும் பொதுமக்கள் வசதிக்காக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் எனவும், மாலை நேரம் அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் போக்குவரத்து வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக தினசரி நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், பேருந்துகளை இயக்க பணிமனை மேற்பார்வையாளர்களால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சான்றும், NTC ஆல் அளிக்கப்பட்ட ஒப்புதல் கடிதமும் அவசியம் என அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுக்மா தெரிவித்துள்ளார்.