TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளிகள் இயல்பாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் சரிவர இயக்கப்படவில்லை. இதையடுத்து தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும் தற்போது திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் நடந்து முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 13ம் தேதி முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு முதல் பள்ளி ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இவர் தெரிவித்ததாவது, தற்போது பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு,நகராட்சி மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 அன்று நிலவரப்படி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிட வேண்டும்.
Exams Daily Mobile App Download
இது குறித்த விவரங்களை இணை இயக்குனரின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பமிட்டு விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனுப்பப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை இது சரியானதா என்று உறுதி செய்த பின்னர் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.