தமிழக மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மற்றொரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மின் வாரியத்தில் காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் கொரோனா காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்து வந்தனர். மேலும் வேலைவாய்ப்பை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அத்துடன் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
BSNL நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, சம்பளம் & விண்ணப்ப விவரங்கள்!
தமிழகத்தில் மின்வாரியத்தில் 1.46 லட்ச பணியிடங்கள் உள்ளது. அதில் 3-ல் ஒரு பங்கு இடங்கள் காலியாக உள்ளது என்று அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக மின் கணக்கீடு பணிகளை வீடுகளில் சென்று மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் முந்தைய மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தும் படி பொதுமக்கள் அறிவுறுத்தபட்டார்கள். தற்போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற முறையை அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நடைதிறப்பு அறிவிப்பு!
இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய 2 மின் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது குறைந்த பணியாளர்களை கொண்டு மாதாந்திர மின் கணக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகே மாதந்தோறும் மின் கணக்கீடு பணிகள் தொடரும் என்று மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளரிடம் அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்