தமிழக இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்து அறநிலையத் துறை:

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் உள்ள அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரத்தில் பாடப்பட்ட பாடலில் இடம்பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார் என்பது மேலும் சிறப்பாகும். தென் மண்டலங்களில் உள்ள பாடலில் இடம்பெற்ற கோவில்களுள் இதுவும் ஒன்று. இத்தகைய சிறப்புமிக்க அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலிலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

அந்த ஆய்விற்கு பின்னர் திருக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருக்குளத்தின் படித்துறைகள் சுத்தம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் கோயில் குளத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமான முறையில் பராமரிக்கப்படும். தேர்க்கொட்டகை சுத்தம் செய்யப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருக்கோயிலில் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இத்தகைய வளர்ச்சி திட்ட பணிகளை கூடிய விரைவில் தொடரப்படும் என்று அவர் கூறினார்.

மத்திய அரசில் 75 காலிப்பணியிடங்கள் – தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ப்பு!!

மேலும் அன்னதான கூடம் மற்றும் பரிமாறப்படும் உணவுகள் சுத்தமான முறையில் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும் கோயில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து திருக்கோயில் வளாகம் 22 அலுவலர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!