தமிழக சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள், ஓய்வூதியம் – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழக பள்ளிகளில் காலியாக இருக்கும் சத்துணவு பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊழியர்கள் போராட்டம்
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறைகளுக்கும் புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டு வரும் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் படி இன்றைய (செப்டம்பர் 7) கூட்டத்தின் போது பணி நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வாபஸ் செய்வதாக அறிவித்திருந்தார்.
நிபா வைரஸுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு – சாட் ஆக்ஸ் 1 விரைவில் பயன்பாடு!
இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனுடன் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு பணி செய்து வரும் ஊழியர்களின் ஓய்வு காலத்தை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் ரூ.750 உதவித்தொகையுடன் ITI மாணவர் சேர்க்கை – செப்.15 கடைசி நாள்!
அதாவது அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் சத்துணவு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும், சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.