தமிழக ரேஷன் கடைகளில் 6,200 பணியிடங்கள் – விரைவில் நேர்காணல்! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கட்டுனர்கள், விற்பனையாளர்கள், பதிவாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் அமைச்சர் ஐ. பெரியசாமி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6,200 பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடை ஊழியர்கள்:
தமிழக ரேஷன் கடைகளில், அரசு பல்வேறு வகையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அண்மையில் ரேஷன் கடைகளில் மொபைல் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெற்று கொள்ளும் முறை கொண்டுவரப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மக்களுக்கு எவ்வித இடையூறும் கால தாமதமும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வழங்கும் வண்ணம் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுநர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணி ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் ஒரே ஊழியர்கள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் இந்தியாவை உலுக்கும் பறவை காய்ச்சல்.. இறைச்சி விற்பனைக்கு தடை – பொதுமக்கள் அச்சம்!
Follow our Instagram for more Latest Updates
இதனை தடுக்கும் வகையிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கிலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 6,200 பணியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடை காலிப்பணியிடங்களுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பதாரர்களின் 10 ,12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு நேரடி நேர்காணல் நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.