தமிழக ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ,ரேஷன் கடை ஊழியர்களுக்கு காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ரேஷன் கடை:
தமிழ் நாடு அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மையமாக வைத்து தமிழக அரசு நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் மற்றும் இது போன்ற இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்திய அரசு. அதன் படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 69 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
TCS ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 6 முதல் 8 சதவீதம் வரை சம்பள உயர்வு!
இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் ஊழியர் காலிப்பணியிடம் நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனம் நடத்தும் ரேஷன் கடைகளில், 2020ம் ஆண்டு, ஏப்., 1ம் தேதி, காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. காலியாக இருந்த, 79 விற்பனையாளர், 20 கட்டுநர் பணியிடங்களுக்கு, விண்ணப்பம் பெறப்பட்டு, அதே ஆண்டு டிச., 7 – 24ம் தேதி வரை, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், 2012 ஆகஸ்ட் 25 இல் கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, மற்றும் 2020ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, விற்பனையாளர் மற்றும் கட்டுனர் காலிப் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை, திருவள்ளூர் மாவட்ட இணை பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் பா.ஜெயஸ்ரீ தெரிவித்து உள்ளார்.