தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 2 கடைசி நாள்!
மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற சுகாதார செவிலியர், புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 2ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் காலிப்பணியிடங்கள்:
மதுரையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற சுகாதார செவிலியர், புள்ளியியல் உதவியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அறிக்கை ஒன்றை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதில் நகர்ப்புற சுகாதார செவிலியர் (UHN/ANM) பணியிடத்துக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – 41,363 பேர் விண்ணப்ப பதிவு!
அதனுடன் நர்ஸ் மிட் ஒயிப், பலதரப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் அரசு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடற்தகுதிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த தற்காலிக பணியிடங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியாக பிஎஸ்சி புள்ளியியல் அல்லது கணிதம் படித்திருக்க வேண்டும். மேலும் கணினி தட்டச்சுடன் ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.20000 ஊதியம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்தம் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்த பணியிடங்கள் எந்த காரணம் கொண்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படத்துடன் `மாநகர் நல அலுவலர், மதுரை மாநகராட்சி, 2-வது மாடி, மைய நகர்நல பிரிவு, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை-625002′ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப ஆகஸ்ட் 2 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.