தமிழக Post Office துறையில் காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான அனைத்து தகவலும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரில் இருந்து அனைவருமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Office துறை காலிப்பணியிடங்கள்
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வபோது அறிவிக்கப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கான பணியாட்கள் தேவைப்படுகின்றன. மேலும், இந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு ATM ல் பணம் எடுக்க புதிய விதிகள் – முழு விவரம் இதோ!
அதாவது, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயது முதல் 50 வயது வரை உள்ள அனைவருமே இந்த நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம். அதாவது, படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் அல்லது சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் ஆகிய அனைவருமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
மேலும், காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை, கணினி அறிவு மற்றும் உள்ளூர் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் பெற்ற இளைஞர்கள் முதன்மை தபால் அலுவலகம், அண்ணா சாலை, சென்னை என்கிற முகவரிக்கு வரும் ஜூலை 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களின் சுய விவரக்குறிப்பு, 2 பாஸ்போர்ட் புகைப்படம், வயதுச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர் ரூ. 5000-ஐ ரொக்க பாதுகாப்பாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன: படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் (*சுற்றி திரிந்து*) கொண்டிருக்கும் இளைஞர்கள் .
I want jop