தமிழக அரசு துறையில் காலிப்பணியிடங்கள் – 2,05,700 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் நாளை TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்த துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது சமூக மகளிர் மற்றும் உரிமை துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்தவர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு ஹோம் சயின்ஸ் அல்லது சைக்காலஜியில் முதுகலை பட்டம், சமூகவியல், குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணியியல், மறுவாழ்வு அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Verizon தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
விண்ணப்பிக்கும் பொது நிரந்தர பதிவுக் கட்டணமாக 150 ரூபாயும் தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இப்பதவிக்கான கணினி வழித்தேர்வு 05.11.2022 அன்று நடைபெறும். விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊதியமாக ரூ. 56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.