தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட நியாய விலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை அதிவேகமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில், நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரிசி இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் தமிழக அரசின் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நன்மை அடைந்து வருகின்றனர். இதனிடையே, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி கொண்டிருக்கிறது. அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் குடும்ப அட்டைதாரருக்கு நேரடியாக ரேஷன் அட்டை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ExamsDaily Mobile App Download
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின்கீழ் இயங்கும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் எடையாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது ஒரு கடைக்கு ஒரு பணியாளர் கூட இல்லாத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதத்தில் மாவட்ட வாரியாக மொத்தம் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளனர். இப்பணி நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், பொருள் கட்டி கொடுப்பவர்கள் உள்பட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
WIPRO சென்னை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!
இப்படிப்பட்ட சூழலில் தான், நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்து வருகிறார். அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக கட்டப்பட்ட கூட்டுறவு நியாவிலைக்கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை அதிவேகமாக நிரப்ப துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்துள்ளார்.