தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில், நிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை, நிதி நிலைமை சீரானதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேவையான இடங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி:

தமிழகத்தில், புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 9வது மன்னராகத் திகழ்ந்த ராஜ ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நேற்று முதல் வருகிற 26ம் தேதி வரை கொண்டாடப்படும் நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அப்போது தமிழகத்தில் பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அதிமுக ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

Exams Daily Mobile App Download

கடந்த ஆண்டு தமிழக முதல்வர், கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு மிகப் பெரிய நிதி சுமையில் உள்ளது, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிகிறது, இருந்தபோதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையால் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிறுத்தம் – உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும், தொடர்ந்து பேசிய அவர், புதுக்கோட்டையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும் 690 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!