10வது முடித்தவரா? சென்னை நகர அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – அறிவிப்பு வெளியீடு!

1
10வது முடித்தவரா? சென்னை நகர அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - அறிவிப்பு வெளியீடு!
10வது முடித்தவரா? சென்னை நகர அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - அறிவிப்பு வெளியீடு!
10வது முடித்தவரா? சென்னை நகர அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் பணிக்கான காலியிட அறிவிப்பு சென்னை நகர முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அஞ்சல் துறைக்கான பணியாளர்கள் தேர்வு அடிக்கடி நடக்கும். இதற்கென நேர்காணல் நடத்தி ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது சென்னை நகர வடக்கு கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

நாளை முதல் ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்களுக்கான தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முன்னாள் படை வீரர்கள், சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னை நகர வடகோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமிஞ்சிகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர்நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்,
சென்னை நகர வடக்கு கோட்டம்,
சென்னை – 600 008.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!