விஷ பாம்பு தாக்கிய வாவா சுரேஷின் நிலை – 65 விஷமுறிவு மருந்து பாட்டில்கள்!
கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல பாம்பு பிடிக்கும் நபரான வாவா சுரேஷ் அவர்களை விஷ பாம்பு தாக்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளார். அவருக்கு அளித்த சிகிச்சை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாவா சுரேஷ்:
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ். அந்தப் பகுதிகளில் வீட்டுப்பகுதிகளுக்கு வரும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதுதான் சுரேஷுக்கு வழக்கம். ராஜநாகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார். வாவா சுரேஷ், பாம்பு பிடிப்பதற்கு எந்தவித உபகரணமும் இல்லாமல் வெறுங்கையால் பாம்புகளைப் பிடிப்பார் வாவா சுரேஷ். இவர் பாம்பு பிடிப்பதைப் பார்க்கவே மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள்.
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு ஒரே மொபைல் நம்பரில் ஆதார் கார்டு எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஜனவரி மாதம் 31-ம் தேதி கோட்டயம், சங்கனாச்சேரி அருகில் இருக்கும் குறிச்சிப் பகுதியில் பாம்பு பிடிக்கச் சென்றார். 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் வாலைப் பிடித்து சாக்கில் அடைக்கும்போது, வாவா சுரேஷின் வலது தொடையில் பாம்பு கடித்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் வாவா சுரேஷ். பொதுவாக நல்லபாம்பு மனிதர்களை கடிக்கும் போது அதிக விஷத்தை செலுத்தாது.
ஆதார் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஆனால் சுரேஷை அதிக கோவத்தில் கடித்ததால் அதிக விஷத்தை அவரின் உடலில் செலுத்தியது. 25 விஷ முறிவு பாட்டில்கள் ஏற்றினால் விஷம் முறிந்து விடும். ஆனால் சுரேஷிற்கு தொடர்ந்து 65 விஷமுறிவு பாட்டில் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சுரேஷ் நினைவு திரும்பியுள்ளார். எழுந்து நடமாடி வருகிறார். தனது உயிரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இனி பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாம்பு பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.