கோமாவில் இருந்து மீண்டு வந்த பாம்புபிடி மன்னன் ‘வாவா சுரேஷ்’ – மருத்துவர்கள் அறிக்கை!
சமீபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாவா சுரேஷை நாகப்பாம்பு கடித்து அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். அவர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் கோமா நிலையில் இருந்து குணமாகி பேசத் தொடங்கி உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அறிக்கை:
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ் பாம்புகளை எளிதாக பிடிப்பதில் திறமை வாய்ந்தவர். மேலும் பாம்பு பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடுவார். சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரிய வகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார். இதற்கு முன் நூற்றுக்கும் அதிகமான முறை தம்மை பாம்புகள் தீண்டி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். பல முறை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்று நலமுடன் திரும்பியிருப்பதாகவும் சுரேஷ் தெரிவித்திருக்கிறார்
Post office மாதம் ரூ.250 முதல் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் – குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!
மேலும் சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாம்பு பண்ணையில் அரசுப்பணி கிடைத்தபோதிலும் அதனை நிகரித்துவிட்டதாகவும் பாம்புகளிடம் இருந்து மக்களை காப்பதே தனது முதல் பணி எனக் கூறினார். இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாவா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாகவும், மோசமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பாம்பு கடியால் சுரேஷ் கோமோ நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதற்கட்ட சிகிச்சையை தொடர்ந்து அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனாக கோமாவில் இருந்து மீண்டுள்ளதாகவும், சில வார்த்தைகள் பேச ஆரம்பித்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.