அரசு, தனியார் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அலுவலகங்களும் 3 நாட்கள் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பால் முதன்முதலாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கினால் மக்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் தொற்றின் சங்கிலி தடைபட்டு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுக்க முடியும். முதல் ஊரடங்கிற்கு பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள்.
நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு – தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!!!
இரண்டாம் அலை:
முதல் அலையின் தீவிரம் 2020 டிசம்பர் மாதத்தில் குறையத் தொடங்கியது. மீண்டும் 2021 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் பரவல் இரண்டாம் அலையாக பரவத் தொடங்கியது. இதற்கு முன்னர் பாதிக்கபட்டவர்கள் எணிக்கையை விட இம்முறை அதிக அளவிலான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அலுவலகம் மூடல்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அம்மாநில அரசு புதிதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை மூடப்பட வேண்டும். அத்தியாவசிய பணிகள் செய்யும் அலுவலகங்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்