இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – உத்தரகண்ட் அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை இன்று (ஜூலை 20) முதல் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொதுமுடக்கத்தில் இருந்து சில கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்புகள் முழுவதும் குறையாத சூழலில் சில மாநிலங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் ஜூலை 20 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 374 உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல் !!
அந்த வகையில் முழு ஊரடங்கு உத்தரவானது இன்று (ஜூலை 20) முதல் இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரகண்ட் மாநிலத்திற்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சுபோத் யூனியல் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தவிர உத்தரகண்ட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், இனி வாரத்தின் ஆறு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படலாம். மேலும் இன்று முதல் 50% திறனுடன் நீர் பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தில் கடைகளின் இயக்க நேரம் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கொடுக்கப்பட்டிருந்தது. கூடுதலாக அனைத்து பயிற்சி நிறுவனங்களும் 50% மாணவர்களுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.